ஜோதிடம் - ஒரு பார்வை - பகுதி 1
ஜோதிடம் - ஒரு பார்வை - பகுதி 1
BY SP.VR.SUBBIAH



எல்லாம் வல்ல இறைவனை வணங்கிவிட்டு
BY SP.VR.SUBBIAH



எல்லாம் வல்ல இறைவனை வணங்கிவிட்டு
இந்த ஜோதிடப் பகுதியைத் துவங்குகிறேன்.
ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்களை
நம்பவைக்க வேண்டும் என்ற எண்ணத்திலோ
அல்லது நடுநிலையாக இருப்பவர்களைப் பிடித்து
இழுத்துவந்து நம்ப வைக்க வேண்டுமென்பதோ
என் நோக்கமல்ல!
யாரும், யாரையும் மாற்ற முடியாது!
அவர்களாகவே அறிந்து அலலது உணர்ந்து
மாறினால்தான் மாற்றம் ஏற்படும்!
நான் கற்றுணர்ந்தவைகள், யாருக்காவது பயன்படட்டும்
என்ற உயர்ந்த எண்ணத்தில் எழுதத்துவங்கிறேன்
ஜோதிடம் என்பது பெரிய கடல். அதை வாளியில்
பிடித்து நிரப்புவது போன்றதல்ல என் செயல்.
ஒரு அதிவேகப் படகில் உங்களை ஏற்றிக்கொண்டு
போய் கடலின் தன்மையை உங்களுக்குக் காட்சியாக
காட்டப்போகிறேன்.முத்துக்களையும், சுறாமீன்களையும்
காட்டப் போகிறேன்.
விருப்பம் உள்ளவர்கள் என்னுடன் வாருங்கள்.
மற்றவர்கள் வரவேண்டாம். கரையிலேயே
நின்றுவிடுங்கள். அது உங்களுக்கும் நல்லது
படகில் என்னுடன் பயணிப்பவர்களுக்கும் நல்லது!
----------------------------------------------------------------------
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு,
ஒரு பெரிய நிறுவனம் ஒன்றில் நான் பணிபுரிந்தபோது
என்னுடன் - எனக்கு மேலாளராக வேலைபார்த்த
நண்பர் ஒருவருக்கு ஜோதிடத்தில் ஆழ்ந்த ஞானம்
உண்டு.
ஜோதிடம் தெரிந்தவரென்பதால், அவருக்கு அந்த
அலுவலகத்தில் ஒரு தனி மரியாதையும் இருந்தது
ஆனால் அவர் அதை வெளியே காட்டிக் கொள்ள
மாட்டார்.எளிமையாக இருப்பார்.
அவ்ருக்குக் கீழே, அவருடைய நேர் உதவியாளனாக
அடியவன் பணி புரிந்ததால், அவருக்கும் எனக்கும்
தொடர்பு அதிகமாகி, அது நட்பாகவும் மலர்ந்து
பரிணமித்தது.
ஒரு நாள் திடீரென்று, அவரிடம் நான் சொன்னேன்
"ஸ்வாமி! எனக்கும் ஜோதிடம் கற்றுக் கொள்ள
ஆசையாக இருக்கிறது.அதற்கு நான் எனன
செய்ய வேண்டும்?"
(எனக்கும் அவருக்கும் இருபது வயது வித்தியாசம்
அவரை நான் முதலில் சார்' என்று கூப்பிட்டவன்,
பிறகு மற்ற மேல் அதிகாரிகள் அவரைக் கூப்பிடுவது
போல ஸ்வாமி' என்றுதான் அழைக்க ஆரம்பித்தேன்.)
அவர் சிரித்துவிட்டு,"அது பெரிய மண்டைக்
குடைச்சலான வேலை! அதைத் தெரிந்து
கொண்டு என்ன செய்யப்போகிறாய்? தெரிந்து
கொண்டால் அது உன்னைப் பேயாகப் பிடித்துக்
கொண்டு விடும்.ஆகவே சும்மா இரு!"
என்று சொல்லி மறுத்து விட்டார்.
எதுவும் மறுக்கப்பட்டால் மனிதன் இரண்டு
மடங்கு ஆர்வமாகி விடுவானில்லையா?
நானும் அப்படி ஆர்வமாகி அவரை விடாமல்
நச்சரிக்க ஆரபித்தேன்.
என் நச்சரிப்புப் பொறுக்காமல் ஒருநாள் அவர்
என்னிடம் ஒரு பஞ்சாங்கத்தைக் கொடுத்து அதில்
உள்ள முக்கியமான த்கவல்களை மனப்பாடம்
செய்துவிட்டு வா என்று சொல்லி என்னை
ஓரங்கட்டி விட்டார்.
பஞ்சாங்கத்திலுள்ள விஷயங்களை மனனம்
செய்வதற்கு மூன்றுமாத காலமாவது ஆகும்,
அதுவரை இவன் தொல்லை இல்லாமல் இருக்கலாம்
என்று நினைத்தாரோ என்னவோ!
அனால் நான் விடாக் கொண்டனாக, அலுவலக
நேரம் போக மீதமிருந்த நேரங்களில் முழு முயற்சியுடன்
பதினைந்தே நாட்களில் மனனம் செய்து விட்டு,
திருவிளையாடலில் வரும் தருமி ஸ்டைலில்
அவரிடம் சென்று,"பஞ்சாங்கத்தைக் கரைத்துக்
குடித்துவிட்டு வந்திருக்கிறேன் - கேள்விகளை
நீங்கள் கேட்கலாம்" என்றேன்
அவர் சிக்கலான முறையில் பத்துக் கேள்விகள்
கேட்க நான் அத்தனை கேள்விகளுக்கும்
தயக்கமினறித் தடுமாற்றமின்றி பதில் உரைத்தவுடன்
அவர் அசந்துபோய் விட்டார்.
"அடப்பாவி, எப்படியடா, சாத்தியமாயிற்று என்றார்?"
"அதை விடுங்கள் அடுத்ததாக எதைப் படிக்கவேண்டும்?
என்றேன்.
அவர் அதற்கு உடனே சொன்னார்," உன் ஜாதகத்தைக்
கொண்டு வா, பார்த்துவிட்டுச் சொல்கிறேன்!"
"எதற்காக என்னுடைய ஜாதகம் தேவைப்படுகிறது -
நான் ஜோதிடம் கற்றுக் கொள்வதற்கும், அதற்கும்
என்ன சம்பந்தம் என்று சொல்லுங்கள்"
"ஜோதிடம் கற்றுக் கொள்வதற்கு நல்ல புத்தியும்,
அதீத நினைவாற்றலும் வேண்டும். ஜாதகத்தில்
புதன் நன்றாக இருந்தால்தான் ஜோதிடம்
ம்ண்டையில் ஏறும். ஆக்வே கொண்டு வா!"
என்று சொன்னார்.
நான் என் சட்டைப்பையிலேயே அதை வைத்திருந்தேன்
எடுத்து நீட்டினேன்
வாங்கிப் பார்த்தவர் சொன்னார்,"உனக்கு ஜாதகத்தில்
புதன் ஏழில் அமர்ந்து வலுவாக உள்ளான். ஆகவே
உனக்கு ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு
இருக்கிறது. கற்றுக்கொள். ஆனால் அதை Hobby
ஆக மட்டுமே வைத்துக்கொள்"
நான் அந்த நேரம் வானத்தில் பறந்தது என்னவோ
உண்மை! அத்ற்குப் பிறகு ஜோதிடத்தைக் கற்றுக்
கொள்வத்ற்கு நான் பட்டபாடு இருக்கிறதே - அது
பெரும்பாடு. அதில் பல சுவார்சியமான விஷயங்களும்
உள்ளன
ஜோதிடத்தில் இரண்டு பகுதிகள் உண்டு
1.அடிப்படை ஜோதிடம் (Basic Astrology)
2.மேல் நிலை ஜோதிடப்பாட்ங்கள் (Advanced Study)
அடிப்படை ஜோதிடம் மிகவும் எளிதானது.
அனைவருக்கும் புரியும்படி இருக்கும்.
தெரிந்து கொள்வதும் எளிது
அடிப்படை ஜோதிடத்தைப் பற்றி ஐந்து அல்லது
ஆறு பதிவுகளில் உங்களுக்கு விளக்கிச்
சொல்லி விடுகிறேன்.
அதற்குப் பிறகு மேல்நிலை ஜோதிடத்தில்
படிக்க வேண்டிய நூல்களைப் பட்டியலிட்டு
விடுகிறேன். விருப்பப்படுபவர்கள் அவற்றை
வாங்கிப் படிக்கலாம்
பின் பதிவுகளில் ஜோதிட மேதைகளைப் பற்றியும்
அவர்கள் சொல்லி நடந்த பல சுவாரசியமான
விஷயங்களைப் பற்றியும் பதிவிட உள்ளேன்
மொத்ததில் பதிவின் சுவாரசியம் கெடாமல்
எழுதுவேன் என்று உங்கள் அனைவருக்கும்
தெரிவித்துக் கொள்கிறேன்
ஆகவே ஒரு பதிவையும் விட்டு விடாது தொடர்ந்து
படிக்க வேண்டுகிறேன். அப்போதுதான் உங்களுக்கு
ஒரு கன்டினியூட்டி கிடைக்கும்
பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் முடித்துக்
கொள்கிறேன். மற்றவை நாளையப்பதிவில்
(தொடரும்)
ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்களை
நம்பவைக்க வேண்டும் என்ற எண்ணத்திலோ
அல்லது நடுநிலையாக இருப்பவர்களைப் பிடித்து
இழுத்துவந்து நம்ப வைக்க வேண்டுமென்பதோ
என் நோக்கமல்ல!
யாரும், யாரையும் மாற்ற முடியாது!
அவர்களாகவே அறிந்து அலலது உணர்ந்து
மாறினால்தான் மாற்றம் ஏற்படும்!
நான் கற்றுணர்ந்தவைகள், யாருக்காவது பயன்படட்டும்
என்ற உயர்ந்த எண்ணத்தில் எழுதத்துவங்கிறேன்
ஜோதிடம் என்பது பெரிய கடல். அதை வாளியில்
பிடித்து நிரப்புவது போன்றதல்ல என் செயல்.
ஒரு அதிவேகப் படகில் உங்களை ஏற்றிக்கொண்டு
போய் கடலின் தன்மையை உங்களுக்குக் காட்சியாக
காட்டப்போகிறேன்.முத்துக்களையும், சுறாமீன்களையும்
காட்டப் போகிறேன்.
விருப்பம் உள்ளவர்கள் என்னுடன் வாருங்கள்.
மற்றவர்கள் வரவேண்டாம். கரையிலேயே
நின்றுவிடுங்கள். அது உங்களுக்கும் நல்லது
படகில் என்னுடன் பயணிப்பவர்களுக்கும் நல்லது!
----------------------------------------------------------------------
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு,
ஒரு பெரிய நிறுவனம் ஒன்றில் நான் பணிபுரிந்தபோது
என்னுடன் - எனக்கு மேலாளராக வேலைபார்த்த
நண்பர் ஒருவருக்கு ஜோதிடத்தில் ஆழ்ந்த ஞானம்
உண்டு.
ஜோதிடம் தெரிந்தவரென்பதால், அவருக்கு அந்த
அலுவலகத்தில் ஒரு தனி மரியாதையும் இருந்தது
ஆனால் அவர் அதை வெளியே காட்டிக் கொள்ள
மாட்டார்.எளிமையாக இருப்பார்.
அவ்ருக்குக் கீழே, அவருடைய நேர் உதவியாளனாக
அடியவன் பணி புரிந்ததால், அவருக்கும் எனக்கும்
தொடர்பு அதிகமாகி, அது நட்பாகவும் மலர்ந்து
பரிணமித்தது.
ஒரு நாள் திடீரென்று, அவரிடம் நான் சொன்னேன்
"ஸ்வாமி! எனக்கும் ஜோதிடம் கற்றுக் கொள்ள
ஆசையாக இருக்கிறது.அதற்கு நான் எனன
செய்ய வேண்டும்?"
(எனக்கும் அவருக்கும் இருபது வயது வித்தியாசம்
அவரை நான் முதலில் சார்' என்று கூப்பிட்டவன்,
பிறகு மற்ற மேல் அதிகாரிகள் அவரைக் கூப்பிடுவது
போல ஸ்வாமி' என்றுதான் அழைக்க ஆரம்பித்தேன்.)
அவர் சிரித்துவிட்டு,"அது பெரிய மண்டைக்
குடைச்சலான வேலை! அதைத் தெரிந்து
கொண்டு என்ன செய்யப்போகிறாய்? தெரிந்து
கொண்டால் அது உன்னைப் பேயாகப் பிடித்துக்
கொண்டு விடும்.ஆகவே சும்மா இரு!"
என்று சொல்லி மறுத்து விட்டார்.
எதுவும் மறுக்கப்பட்டால் மனிதன் இரண்டு
மடங்கு ஆர்வமாகி விடுவானில்லையா?
நானும் அப்படி ஆர்வமாகி அவரை விடாமல்
நச்சரிக்க ஆரபித்தேன்.
என் நச்சரிப்புப் பொறுக்காமல் ஒருநாள் அவர்
என்னிடம் ஒரு பஞ்சாங்கத்தைக் கொடுத்து அதில்
உள்ள முக்கியமான த்கவல்களை மனப்பாடம்
செய்துவிட்டு வா என்று சொல்லி என்னை
ஓரங்கட்டி விட்டார்.
பஞ்சாங்கத்திலுள்ள விஷயங்களை மனனம்
செய்வதற்கு மூன்றுமாத காலமாவது ஆகும்,
அதுவரை இவன் தொல்லை இல்லாமல் இருக்கலாம்
என்று நினைத்தாரோ என்னவோ!
அனால் நான் விடாக் கொண்டனாக, அலுவலக
நேரம் போக மீதமிருந்த நேரங்களில் முழு முயற்சியுடன்
பதினைந்தே நாட்களில் மனனம் செய்து விட்டு,
திருவிளையாடலில் வரும் தருமி ஸ்டைலில்
அவரிடம் சென்று,"பஞ்சாங்கத்தைக் கரைத்துக்
குடித்துவிட்டு வந்திருக்கிறேன் - கேள்விகளை
நீங்கள் கேட்கலாம்" என்றேன்
அவர் சிக்கலான முறையில் பத்துக் கேள்விகள்
கேட்க நான் அத்தனை கேள்விகளுக்கும்
தயக்கமினறித் தடுமாற்றமின்றி பதில் உரைத்தவுடன்
அவர் அசந்துபோய் விட்டார்.
"அடப்பாவி, எப்படியடா, சாத்தியமாயிற்று என்றார்?"
"அதை விடுங்கள் அடுத்ததாக எதைப் படிக்கவேண்டும்?
என்றேன்.
அவர் அதற்கு உடனே சொன்னார்," உன் ஜாதகத்தைக்
கொண்டு வா, பார்த்துவிட்டுச் சொல்கிறேன்!"
"எதற்காக என்னுடைய ஜாதகம் தேவைப்படுகிறது -
நான் ஜோதிடம் கற்றுக் கொள்வதற்கும், அதற்கும்
என்ன சம்பந்தம் என்று சொல்லுங்கள்"
"ஜோதிடம் கற்றுக் கொள்வதற்கு நல்ல புத்தியும்,
அதீத நினைவாற்றலும் வேண்டும். ஜாதகத்தில்
புதன் நன்றாக இருந்தால்தான் ஜோதிடம்
ம்ண்டையில் ஏறும். ஆக்வே கொண்டு வா!"
என்று சொன்னார்.
நான் என் சட்டைப்பையிலேயே அதை வைத்திருந்தேன்
எடுத்து நீட்டினேன்
வாங்கிப் பார்த்தவர் சொன்னார்,"உனக்கு ஜாதகத்தில்
புதன் ஏழில் அமர்ந்து வலுவாக உள்ளான். ஆகவே
உனக்கு ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு
இருக்கிறது. கற்றுக்கொள். ஆனால் அதை Hobby
ஆக மட்டுமே வைத்துக்கொள்"
நான் அந்த நேரம் வானத்தில் பறந்தது என்னவோ
உண்மை! அத்ற்குப் பிறகு ஜோதிடத்தைக் கற்றுக்
கொள்வத்ற்கு நான் பட்டபாடு இருக்கிறதே - அது
பெரும்பாடு. அதில் பல சுவார்சியமான விஷயங்களும்
உள்ளன
ஜோதிடத்தில் இரண்டு பகுதிகள் உண்டு
1.அடிப்படை ஜோதிடம் (Basic Astrology)
2.மேல் நிலை ஜோதிடப்பாட்ங்கள் (Advanced Study)
அடிப்படை ஜோதிடம் மிகவும் எளிதானது.
அனைவருக்கும் புரியும்படி இருக்கும்.
தெரிந்து கொள்வதும் எளிது
அடிப்படை ஜோதிடத்தைப் பற்றி ஐந்து அல்லது
ஆறு பதிவுகளில் உங்களுக்கு விளக்கிச்
சொல்லி விடுகிறேன்.
அதற்குப் பிறகு மேல்நிலை ஜோதிடத்தில்
படிக்க வேண்டிய நூல்களைப் பட்டியலிட்டு
விடுகிறேன். விருப்பப்படுபவர்கள் அவற்றை
வாங்கிப் படிக்கலாம்
பின் பதிவுகளில் ஜோதிட மேதைகளைப் பற்றியும்
அவர்கள் சொல்லி நடந்த பல சுவாரசியமான
விஷயங்களைப் பற்றியும் பதிவிட உள்ளேன்
மொத்ததில் பதிவின் சுவாரசியம் கெடாமல்
எழுதுவேன் என்று உங்கள் அனைவருக்கும்
தெரிவித்துக் கொள்கிறேன்
ஆகவே ஒரு பதிவையும் விட்டு விடாது தொடர்ந்து
படிக்க வேண்டுகிறேன். அப்போதுதான் உங்களுக்கு
ஒரு கன்டினியூட்டி கிடைக்கும்
பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் முடித்துக்
கொள்கிறேன். மற்றவை நாளையப்பதிவில்
(தொடரும்)