Thursday, August 18, 2016

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 10

ஜியா-உல்-ஹக்'கின் மரணம்

















ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 10

ESP என்றால் என்ன?
(தொடர்ச்சி)
முன் பதிவைப் படிக்காதவர்கள், அதைப் படித்துவிட்டு
இதற்கு வரவும்

20.12.1971 முதல் 5.7.1977 வரை பாகிஸ்தானின்
சர்வ வல்லமை படைத்த மனிதராக இருந்த
திரு. ஜுல்ஃபிகர் அலி புட்டோ' வைத் தெரியாதவர்களே
இருக்க மாட்டார்கள்

1977 ம் வருடத்தின் துவக்கத்தில் பங்ளாதேஷ்
நாட்டிற்கு அரசியல் சுற்றுப் பயணமாகச் சென்றிருந்த
திரு.புட்டோ அவர்கள் அங்கே மிகவும் பிரபலமாக
இருந்த கிஸ்டி' என்னும் ESP சக்தியுள்ள மனிதரைச்
சந்திக்க விரும்பினார்.

ஏற்பாடு செய்யப்பெற்றது.

தனது பாதுகாவலர்கள் வெளியே நிற்க அவர் மட்டும்
தனியாக உள்ளே சென்று கிஸ்டியின் முன் அமர்ந்தார்.

எதிரில் அமர்ந்திருப்பது சர்வ வல்லமை படைத்த ஒரு
பிரதமர் என்றெல்லாம் கவலைப்படாமல் கிஸ்டி த்ன்னுடைய
பேச்சை சாதாரணமாகத் துவக்கினார்

"மிஸடர், புட்டோ!"

புட்டோ உற்சாகமாகச் சொன்னார் "யெஸ்!"

அடுத்து கிஸ்டியின் வாயிலிருந்து வந்த வார்த்தை
புட்டோவின் உற்சாகத்தையெல்லாம் கடாசுவதைப் போல
இருந்தது

"ஜாக்கிரதை ! (Be careful!)"

" என்ன சொல்கிறீர்கள்?" இது புட்டோ

" உங்களுக்குத் தூக்கு காத்திருக்கிறது!"
(You are going to be hanged)

புட்டோ அதிர்ச்சியடைந்தாலும், கணத்தில் அதை
மறைத்துக் கொண்டு, தொடர்ந்து சொன்னார்
" என்னைக் காப்பாற்றிக் கொள்ள எனக்குத்
தெரியும்: எனக்கு மூளை இருக்கிறது!
(I can safe guard myself: I have brain)"

கிஸ்டி விடமல் சொன்னார்

"தூக்கில் தொங்கும் போது உங்கள் மூளையும் 
சேர்ந்துதான் தொங்கப் போகிறது"
அதற்குப் பிறகு சற்று நேரம் மரியாதை நிமித்தமாக
சில நிமிடங்கள் பேசி விட்டு புட்டோ திரும்பி விட்டார்

கிஸ்டி சொன்னது அப்படியே இரண்டு வருடங்களுக்குள்
பலித்தது (நடந்தது)

4.4.1977ம் தேதியன்று புட்டோ பரிதாபமாகத் தூக்கில்
தொங்க விடப்பட்டார்.

அப்போது லண்டனில் படித்துக் கொண்டிருந்த புட்டோவின்
மகள் பெனாசிர் பூட்டோ இதைக் கேள்வியுற்று, தன்
தந்தையின் மரணத்திற்குப் பிறகு கிஸ்டியைச் சென்று
சந்தித்து அழுதார்.

அப்போது கிஸ்டி அவருக்கு ஆறுதல் சொல்லியதோடு
தன்னுடைய ESP சக்தியால் நடக்கப்போகின்ற
இரண்டு விஷயங்களைச் சொன்னார்.

அதாவது அப்போது பதவியில் இருந்த ஜெனரல்
ஜியா- உல்- ஹக் வெடி விபத்தில் இறப்பார் என்பதையும்,
அவர் இறந்தவுடன் பெனாசிர் பாகிஸ்தானின் பிரத்மர்
ஆவார் என்பதையும் சொன்னார்.

"பழங்கள் வெடித்துச் சிதறும்போது - நீங்கள் பிரதம
ராவீர்கள் என்றார். அதேபோல ஜியா சென்ற
விமானத்தில் பழக்கூடையில் வைக்கப் பட்டிருந்த
வெடிகுண்டு வெடித்ததாலதான் விமானம்
விபத்துக்குள்ளாகி, ஜியா அகால மரணமடைந்த
தோடு, பெனாசிரும் பிரதமரானார்

இவை அனைத்துமே துல்லியமாக அவைகள் நடக்கும்
முன்பே கிஸ்டிக்கு எப்படித் தெரிந்தது?

அதுதான் இந்த ESP யின் சக்தி!

பெனாசிர், பங்ளாதேஷின் பிரதமர் எர்ஷாத் ஆகியோருடன்
கிஸ்டி அவர்களும் சேர்ந்திருக்கும் படத்தைக் கீழே கொடுத்துள்ளேன்
-------------------------------------------



முன்பு ஒரு தமிழ் வார இதழில் வந்த செய்தி இது!

ESP கட்டுரை இரண்டு நாள் இடைவெளிக்குப் பிறகு
ESP சக்தி படைத்திருந்த வேறு ஒரு மனிதரைப் பற்றிய
செய்தியுடன் வரும்!

(தொடரும்)

No comments:

Post a Comment