ESP என்றால் என்ன? ஜோதிடம்-பகுதி 9

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 9
By SP.VR.Subbiah
Extra-Sensory-Perception
தொடர்ந்து மூன்று பதிவுகள் வெறும் பாடமாக நடத்தி
விட்டேன். வகுப்பு மாணவர்களுக்கு வெறும் பாடமாக
நடத்தினால் உற்சாகம் குறைந்துவிடும்.
ஆகவே இன்று மாறுதலுக்காக அரட்டைக் கச்சேரி!
(அதுவும் ஜோதிடத்தைப் பற்றித்தான்!)
எங்கள் ஊரிலிருந்து (தேவகோட்டை) 20 கிலோ மீட்டர்
தூரத்தில் ‘ஜனவழி' என்று ஒரு கிராமம் இருந்தது. அது
திருவாடானை தாலுக்காவைச் சேர்ந்தது. அங்கிருந்து
12 கிலோமீட்டர் தொலைவில் தொண்டி கடற்கரை
உள்ளது. ரம்மியமான சூழலில் உள்ள கிராமம் அது
அங்கே சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குறி
சொல்பவர் (ஜோதிடர்) இருந்தார். இளைஞர்.
26 அல்லது 28 வயதுதான் இருக்கும்
ஜாதகக் குறிப்பு, கைரேகை எதுவும் வேண்டாம்.
எதிரில் வந்து உட்காரும் நபரை அசத்துகிற மாதிரி,
அவராகவே வந்தவருடைய பெயர், ஊர், வந்ததின்
நோக்கம், அவர் கேட்க வந்த கேள்வி, அதற்குரிய
Extra-Sensory-Perception
தொடர்ந்து மூன்று பதிவுகள் வெறும் பாடமாக நடத்தி
விட்டேன். வகுப்பு மாணவர்களுக்கு வெறும் பாடமாக
நடத்தினால் உற்சாகம் குறைந்துவிடும்.
ஆகவே இன்று மாறுதலுக்காக அரட்டைக் கச்சேரி!
(அதுவும் ஜோதிடத்தைப் பற்றித்தான்!)
எங்கள் ஊரிலிருந்து (தேவகோட்டை) 20 கிலோ மீட்டர்
தூரத்தில் ‘ஜனவழி' என்று ஒரு கிராமம் இருந்தது. அது
திருவாடானை தாலுக்காவைச் சேர்ந்தது. அங்கிருந்து
12 கிலோமீட்டர் தொலைவில் தொண்டி கடற்கரை
உள்ளது. ரம்மியமான சூழலில் உள்ள கிராமம் அது
அங்கே சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குறி
சொல்பவர் (ஜோதிடர்) இருந்தார். இளைஞர்.
26 அல்லது 28 வயதுதான் இருக்கும்
ஜாதகக் குறிப்பு, கைரேகை எதுவும் வேண்டாம்.
எதிரில் வந்து உட்காரும் நபரை அசத்துகிற மாதிரி,
அவராகவே வந்தவருடைய பெயர், ஊர், வந்ததின்
நோக்கம், அவர் கேட்க வந்த கேள்வி, அதற்குரிய
பதில் என்று ஒர் நிமிடத்திற்குள் அனைத்தையும்
சொல்லி முடித்து விடுவார். வந்தவர் கிறுகிறுத்துப்
போய் விடுவார்.
இத்தனைக்கும் அந்த ஜோதிடர் ஏழ்மையான குடும்பத்தைச்
சேர்ந்தவர். ஒரு சிறிய தோட்டத்திற்குள் இருக்கும் ஓட்டு
வீடு. பக்கத்திலேயே வந்தவர்களுடன் அமர்ந்து பேசுவதற்காக
10 x 15 அடிக்கு கூரை வேய்ந்த கொட்டகைக் கூடம்.
அவ்வளவுதான்.
காலை 9 மணி முதல் 12 மணி வரைதான் (குறி) சொல்வார்
குறுகிய காலத்திலேயே பிரபலமாகி, நாளுக்கு நாள் கூட்டம்
அதிகமாகிக் கொண்டே போனது.
காசு வாங்கமாட்டார். தட்சணையாக ரூ.1.25 மட்டுமே,
இத்தனைக்கும் அந்த ஜோதிடர் ஏழ்மையான குடும்பத்தைச்
சேர்ந்தவர். ஒரு சிறிய தோட்டத்திற்குள் இருக்கும் ஓட்டு
வீடு. பக்கத்திலேயே வந்தவர்களுடன் அமர்ந்து பேசுவதற்காக
10 x 15 அடிக்கு கூரை வேய்ந்த கொட்டகைக் கூடம்.
அவ்வளவுதான்.
காலை 9 மணி முதல் 12 மணி வரைதான் (குறி) சொல்வார்
குறுகிய காலத்திலேயே பிரபலமாகி, நாளுக்கு நாள் கூட்டம்
அதிகமாகிக் கொண்டே போனது.
காசு வாங்கமாட்டார். தட்சணையாக ரூ.1.25 மட்டுமே,
வெற்றிலை பாக்கோடு அவர் அருகில் இருக்கும்
தாமபாளத்தில் வைத்துவிட்டு வந்து விடவேண்டும்.
காசையும், வெற்றிலை பாக்கையும் கடைசியில்
வந்து அவருடைய தாயார் எடுத்துக் கொண்டு போவார்
அவருடைய குருநாதரின் கட்டளையாம், அதற்கு
அவருடைய குருநாதரின் கட்டளையாம், அதற்கு
மேல் காசு வாங்க மாட்டார்.
வருகிற ஜனங்களே, வீட்டு வாயிலிருந்து வரிசையாக
நின்று அவரைப் பார்த்துவிட்டுப் போவார்கள்.
நின்று அவரைப் பார்த்துவிட்டுப் போவார்கள்.
12 மணியானவுடன் எழுந்து விடுவார். அதற்குப் பிறகு
நிற்பவர்கள் தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு
அடுத்த நாள் மறுபடியும் வருவார்கள்
வருகிறவர்களுடன் அவருடைய உரையாடல்
வருகிறவர்களுடன் அவருடைய உரையாடல்
எப்படியிருக்கும் என்பதற்கு இரண்டு நிகழ்வுகளைக்
கொடுத்துள்ளேன்.
-------------------------------------------------
ஒரு பெரியவரும், அவருடைய மகனும் வந்து
-------------------------------------------------
ஒரு பெரியவரும், அவருடைய மகனும் வந்து
அவர் எதிரே அமர்கிறார்கள். இருவரும் மீனவர்
குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
"உங்களுடைய பெயர் மாரிமுத்து. கூடவந்திருப்பவர்
"உங்களுடைய பெயர் மாரிமுத்து. கூடவந்திருப்பவர்
உங்களுடைய மகன் சுடலைமுத்து. இருவரும்
தொண்டியிலிருந்து வருகிறீர்கள் - இல்லையா?"
"ஆமாம், தம்பி"
" உங்களுடைய படகைக் காணவில்லை. காணாமல்
"ஆமாம், தம்பி"
" உங்களுடைய படகைக் காணவில்லை. காணாமல்
போய் இரண்டு நாட்களாகி விட்டது இல்லையா?
"ஆமாம், தம்பி"
"அது கிடைக்குமா? அல்லது போனது போனதுதானா?
"ஆமாம், தம்பி"
"அது கிடைக்குமா? அல்லது போனது போனதுதானா?
என்று தெரிந்து கொள்வதற்காக வந்திருக்கிறீர்கள்
இல்லையா?
"ஆமாம், தம்பி"
" அது இப்போது பட்டுக்கோட்டை அருகேயுள்ள
"ஆமாம், தம்பி"
" அது இப்போது பட்டுக்கோட்டை அருகேயுள்ள
முத்துப்பட்டிணம் கடற்கரையில் உள்ளது. அதைத்
திருடிக்கொண்டு போனவர்கள் இப்போது அதை
ஒளித்து வைத்திருக்கிறார்கள். மூன்று நாட்கள்
கழித்துப் போங்கள். போகும்போது, உங்கள் குப்பம்
கழித்துப் போங்கள். போகும்போது, உங்கள் குப்பம்
ஆட்கள் சிலரை உதவிக்குக் கூட்டிக்கொண்டுபோங்கள்.
படகை எடுத்தவர்கள் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள்.
வாங்கிக் கொண்டு வந்து விடுங்கள். அவ்வளவுதான்
சிரமம் ஒன்றும் இருக்காது. இப்போது நீங்கள் போகலாம்”
-----------------------------------------------
கதர் சட்டை, கதர் வேஷ்டி அணிந்து ஒரு பெரியவர்
கதர் சட்டை, கதர் வேஷ்டி அணிந்து ஒரு பெரியவர்
தன் மனைவியுடன் வந்து அவர் எதிரில் அமர்கிறார்.
"உங்கள் பெயர் பீம ராஜா. ராஜபாளையத்திலிருந்து
"உங்கள் பெயர் பீம ராஜா. ராஜபாளையத்திலிருந்து
வருகிறீர்கள்"
"ஆமாம்!"
" உங்கள் இரண்டாவது பெண்னிற்குத் திருமணம்
"ஆமாம்!"
" உங்கள் இரண்டாவது பெண்னிற்குத் திருமணம்
கூடிவராமல் தள்ளிக் கொண்டே போவதால்
கவலையோடு இருக்கிறீர்கள்"
"ஆமாம்!"
" இன்னும் ஒரு வருடம் கழித்து, அடுத்த சித்திரையில்
"ஆமாம்!"
" இன்னும் ஒரு வருடம் கழித்து, அடுத்த சித்திரையில்
திருமணம் நடக்கும். உங்கள் பெரிய பெண்ணைக்
கொடுத்துள்ள சம்பந்தி வீட்டாரே வந்து தங்களுடைய
அடுத்த பையனுக்கு உங்களுடைய இரண்டாவது
பெண்ணைக் கேட்பார்கள். அந்தப் பையன்தான்
மாப்பிள்ளை. கேட்டவுடன் சரி என்று சொல்லி
மாப்பிள்ளை. கேட்டவுடன் சரி என்று சொல்லி
விடுங்கள். அதுவரை இதுபற்றி யாரிடமும் சொல்லாமல்
மெளனமாக இருங்கள்.இப்போது நீங்கள் போகலாம்"
---------------------------------------------------------------------
இதில் ஆச்சரியம் என்னவென்றால், இரண்டுமே
---------------------------------------------------------------------
இதில் ஆச்சரியம் என்னவென்றால், இரண்டுமே
100% சரியாக நடந்தது. இதுபோல அவர் சொன்ன
தெல்லாம் நடந்தது!
அந்தக் குறி சொல்பவருக்கு இது எப்படி சாத்திய
அந்தக் குறி சொல்பவருக்கு இது எப்படி சாத்திய
மாயிற்று?
அதற்குப் ESP (Extra Sensory Perception) என்று பெயர்
அந்த 'அசாத்திய எதையும் அனுமானிக்கும் சக்தி’
அதற்குப் ESP (Extra Sensory Perception) என்று பெயர்
அந்த 'அசாத்திய எதையும் அனுமானிக்கும் சக்தி’
யைப் பற்றி, இது போன்ற இன்னும் நான்கு பேர்களைப்
பற்றிச் சொல்ல வேண்டியது உள்ளதால் - சொன்ன
வுடன், விரிவான விளக்கம் தருகிறேன்
-------------------------------------------------------
அந்த ஜனவழி ஆசாமியின் முகவரியைக் கொடுக்க
-------------------------------------------------------
அந்த ஜனவழி ஆசாமியின் முகவரியைக் கொடுக்க
முடியமா? என்று கேட்பவர்களுக்கு:
அந்த மனிதர் இரண்டு வருடம் வரைதான் அங்கே
அந்த மனிதர் இரண்டு வருடம் வரைதான் அங்கே
இருந்தார் அதற்குப் பிறகு, பல பெரிய தலைகள்
நுழைந்து, பணத்தைக் கொட்டிப் பலன்களைப் பார்க்க
ஆரம்பித்ததும், அந்த மனிதர் தன் குருவின் கட்டளை
யை மீறிப் பணத்தின் மேல் பற்று வைக்க
ஆரம்பித்ததும், அந்த சக்தி (ESP Power)அவரைவிட்டு
ஆரம்பித்ததும், அந்த சக்தி (ESP Power)அவரைவிட்டு
நீங்கிவிட்டதாகவும், அவர் ஊரையே காலி செய்து
கொண்டு கையில் கிடைத்த பணத்துடன் எங்கோ
போய்விட்டதாகவும் தகவல்
---------------------------------------------------------------------
பதிவின் நீளம் கருதி, இன்று இத்துடன் முடித்துக்
---------------------------------------------------------------------
பதிவின் நீளம் கருதி, இன்று இத்துடன் முடித்துக்
கொள்கிறேன்
ஜெனரல் ஜியா - உல் - ஹக்'கின் மரணத்தை இதே
ஜெனரல் ஜியா - உல் - ஹக்'கின் மரணத்தை இதே
மாதிரி தன்னுடைய ESP சக்தி மூலம் முன்பே சொன்ன
பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த அபூர்வ மனிதரைப் பற்றிய
செய்தி, அவருடைய படத்துடன் அடுத்த பதிவில் வரும்!
(தொடரும்)
பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த அபூர்வ மனிதரைப் பற்றிய
செய்தி, அவருடைய படத்துடன் அடுத்த பதிவில் வரும்!
(தொடரும்)
No comments:
Post a Comment