Thursday, August 18, 2016

ஜோதிடம் - ஒரு பார்வை - பகுதி 2

ஜோதிடம் - ஒரு பார்வை - பகுதி 2


ஜோதிடம் - ஒரு பார்வை - பகுதி 2 

முன்பதிவில் வந்த பின்னூட்டம் ஒன்றில் ஒரு
அன்பர் இப்படிக் கேட்டிருந்தார்.

///வானத்துல இருக்கிற கோள்கள், பூமில இருக்கற
அனைவர் மேலேயும் ஒரே விதமாகத்தானே
தாக்குது. அனைவருக்கும் ஒரே மாதிரியான
பலன்கள் தானே இருக்க முடியும். பின்ன எப்படி
வெவ்வேறு பிறந்த தேதியில் இருப்பவர்களுக்கு
வெவ்வேறான பலன்கள் ?///

பிறந்த நொடியில் உள்ள கிரகபலன்கள்தான்
Birth Chart என்னும் ஜாதகத்தை நிறைத்து
விடுகிறது. அதன்படிதான் ஆயுள் முழுக்க
பலன்கள் உண்டாகும். அது கர்ம பலன்
அல்லது பிறவிப் பலன் எனப்படும்

அதை அப்படியே வானில் உள்ள கோள்கள்
செயல் படுத்தும். அதைச் செயல் படுத்துவது
மட்டுமே கிரகங்களின் வேலை!
The planets have only executing power
what is stored in a horoscope

நான் பாலர் பாடத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளேன்
அதாவது L.K.G & U.K.G அளவிற்கான பாடங்கள்
அன்பர் கேட்டிருக்கும் கேள்வி Advanced Study
களில் பாடம் நடத்தப் பெறும்போது கேட்கப்பட
வேண்டிய கேள்வி. அந்தப் பதிவுகளில் இதற்கு
விரிவான பதிலைச் சொல்கிறேன். இப்போது
சொன்னால் விளங்காது!

உங்களுக்குக் கார் ஓட்ட ஆசை என்றால்
முதலில் ஒருவர் உங்களுக்கு காரை மட்டும்தான்
ஓட்டச் சொலித்தர வேண்டும்.

பிறகுதான் காரில், பெட்ரொல் எப்படி இஞ்சினுக்குப்
போகிறது - அங்கே அது எப்படி carburetor
வழியாக இஞ்சினுக்குள் செலுத்தப் படுகிறது
இஞ்சின் எப்படி இயங்குகிறது. இஞ்சினிலிருந்து
இயங்கு சக்தி Gear Box வழியாக சக்கரங்க
ளுக்கு எப்படிப் போகிறது என்று சொல்லித்தர
வேண்டும். எல்லாவற்றிற்கும் முறை என்று
ஒன்று உண்டு.

ஆகவே அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்
ஒரு பதிவைப் படிக்கும் பொழுது பதிவில் உள்ள
விஷயங்களில் சந்தேகம் உள்ளது என்றால்
மட்டுமே அந்தப் பதிவிற்குப் பின்னூட்டம் இட்டுக்
கேளுங்கள்.
வேறு ஏதாவது ச்ந்தேகம் என்றால்
என் மின்னஞ்சல் மூலமாகக் கேளுங்கள். என்
மின்னஞ்சல் முகவரி Profileலில் உள்ளது.
-----------------------------------------------------------------------------
உலகில் எவனும் எந்தக் கலையிலும் கொம்பன்
என்று தன்னை அடையாளப் படுத்திக் கொள்ள
முடியாது. ஒவ்வொரு கலையும் அவ்வளவு பெரியது.
தன்னடக்கம் தேவை. அந்த தன்னடக்கத்தை நாம்
இசைஞானி இளையராஜா அவர்களிடம் காணலாம்

ஜோதிடத்திற்கும் அது பொருந்தும்.

அதனால்தான் ஜோதிட விஷய ஞானம் நிறைந்தவர்கள்
எளிமையாக இருப்பார்கள். அறைகுறை ஆசாமிகள்தான்
ஆட்டம் போடுவார்கள்.

அவர்கள் சொல்வதில் பாதி பலிதமின்றிப் போய்விடும்.
அந்த மாதிரிப் பேர்வழிகளால் ஜோதிடத்திற்கும் ஒரு
கெட்ட பெயர் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஒரு ஜோதிடன் என்ன நடக்கும் என்று கோடிட்டுக்
காட்டலாமேயன்றி, இதுதான் நடக்கும் என்று
அறுதியிட்டோ அல்லது சவால்விட்டோ
சொல்லக்கூடாது

An astrologer can only indicate what will
take place and can not certainly say
what will definitely happen

ஜோதிடத்தின் முதல் விதி இதுதான்
---------------------------------------------------------------------------

மருத்துவத்தில் பல பிரிவுகள் உண்டு. பல
விற்பன்னர்கள் அததற்கென்று தனித்தனியாக
உள்ளார்கள். உதாரணத்திற்குப் பல் மருத்துவர்,
மகப்பேறு மருத்துவர், இருதயநோய் நிபுணர்,
கண் மருத்துவர், கிட்னி ஸ்பெஷலிஸ்ட்,
Open heart surgeon, General disease physician என்று
விதம்விதமாக உள்ளார்கள்.

அதுபோல, ஜோதிடத்திலும் பல பிரிவுகள் உண்டு.
படிப்பைப் பற்றிச் சொல்வது, திருமணப்பொருத்தம்
பார்ப்பது, தோல்விகள், விரையங்கள் (Losses)
முதலியவற்றைச் சொல்வது, தொழிலில்
ஏற்படக்கூடிய ஏற்றங்கள், மாற்றங்களைசொல்வது,
நோய், நொடிகளைக் கணித்துச் சொல்வது,
மரணத்தைப் பற்றிச் சொல்வது என்று பல பிரிவுகள்
உள்ளன.

ஒரு பிரிவில் உள்ள நியதிகளை, நுணுக்கங்களை
அதிகமாகப் படித்ததாலும், படித்து மனதில் ஏற்றி
வைத்ததாலும், அதே பிரிவில் ஆண்டாண்டு காலமாக
பலருடைய ஜாதகங்களைப் பார்த்துப் பலன் சொன்ன
பட்டறிவுனாலும், ஒருவர் அந்தப் பிரிவில் மட்டுமே
மிகுந்த திறமைசாலியாக இருப்பார்.

General Physician' என்று மருத்துவத்துறையில்
சளி, இருமல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு என்று
பொது மருத்துவம் செய்வதற்கு மருத்துவர்கள்
இருப்பதுபோல, பல ஜோதிடர்களுக்கு பொது
ஜோதிடம் மட்டுமே தெரியும்

ஒரு சிலர் மட்டும்தான் சகலகலா வல்லவர்களாக
இருப்பார்கள்.
(அது அவர்களுடைய ஜாதக அமைப்பு:-))))
-------------------------------------------------------------------------------------
என் கதைக்கு வருகிறேன்.

என் நண்பர் கொடுத்த அடிப்படை ஜோதிட நூலைப்
படித்துக் கொண்டிருக்கும்போதே, மேல் படிப்பிற்காக
பல ஜோதிட நூலகளைத்தேடி, வாங்கி சேகரிக்க
ஆரம்பித்தேன்.

அதுபோல practical testற்காக பல உறவினர்கள்
மற்றும் நண்பர்களின் ஜாதகங்களையும் கேட்டு வாங்கிச்
சேகரிக்க ஆரம்பித்தேன். அதெல்லாம் சுவையானது
ஜாதகங்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன்
தர்ருங்கள் என்று சொல்லி நிறையப் பேர்களிடமும்,
மற்றும் பத்திரிக்கைகளில் வந்த பிரபலங்களின்
ஜாதகங்களையும் அடித்துப் பிடித்துச் சேகரிக்க
ஆரம்பிதேன்.

ஜோதிட நூலகளின் சொர்க்கம் மதுரை புது
மண்டபம்தான்.
அங்கே உள்ள பல கடைகளில்
பல நூல்கள் தேறின.

சுவாரசியமாக உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தேன்
அப்போதுதான், நான் நினைத்துப் பாராத சிக்க்ல்
ஒன்று ஏற்பட்டது.

நான் வாங்கிவைத்திருந்த புததகங்கள் அனைத்துமே
கடினமான செய்யுள் வடிவில் இருந்தன. பதம்
பரித்துப் படிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். சொற்களுக்கு
அர்த்தம் தெரிய தமிழ் அகராதியையும் வைத்துக்
கொள்ள வேண்டும். ஒரு கோளையே எதுகை
மோனை சந்தத்திற்காக பல பெயரில் சொல்வார்கள்
உதாரணத்திற்கு சனிக் கிரகம், நீலவன், என்றும்
முடவன் என்றும் சொல்லப்பட்டிருக்கும்

பொருள் எழுதப் பட்டிருந்தாலும் அது 19ம்
நூற்றாண்டுத் தமிழ். நமக்கெல்லாம் ஜெயகாந்தன்
பாலகுமாரன் எழுதும் தமிழ்தான் பழக்கமானது
சரிப்பட்டு வரக்கூடியது

தெருவில் நூறடிக்கு ஒரு Speed Breaker இருந்தால்
எப்படியிருக்குமோ அப்படி! வண்டி ஓட்டுபவன் எப்படி
ஓட்டுவான்?

அந்தக் காலத்தில் அந்த நூல்களில் பாண்டித்யம்
பெற்றவர்களெல்லாம் தந்தை மகன் வழியில் அலலது
குரு - சீடன் வழியில் கற்றிருப்பார்கள்
--------------------------------------------------------------------------------

உதாரணத்திற்கு ஒரே ஒரு செய்யுளைக் கொடுத்துள்ளேன்

"மந்தன்சேயிருவர்கூடி யிருந்திடதிடத்ததுந்தீது
அந்தெதிரிடமுமாக் தறுதியாகத்தீம்புண்டாகும்
உந்தவர்நாப்ன்குமூன்று மோரெட்டும்பத்துநோக்க
அந்தமாய்நினைப்பர்கண்டா யாறிருமாதந்தன்னில்"

- மணி கண்ட கேரள ஜோதிடம் என்னும் நூலில்
வரும் ஒரு பாடல்

(பொருள் - Saturn in association with Mars
in any house will confer only bad result.
In aspecting each other in the chart will
also confer only bad result)
------------------------------------------------------------------------------
திகைத்து நின்று விட்டேன்.

பஞ்சாங்கத்தை படிக்கவைத்த நண்பரிடமே
சென்றால், நான் "அன்றே சொன்னேனில்லையா?"
என்பார் என்ற நினைப்பில் அவரிடம் இதைச்
சொல்லாமல், வேறு ஒரு நண்பரிட்ம்
தற்செயலாகச் சொன்னேன்.

அவர் சொன்னார். இந்தத் தமிழ் புத்தகங்களை
யெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிடு. எளிமையான
ஆங்கிலத்தில் ஏராளமான ஜோதிட நூல்கள் உள்ளன
தமிழில் ராசி அதிபதி, ராசி நாதன், ராசிக்குரியவன்
என்று விதம் விதமாகச் சொல்வதைப் போல இல்லாமல்
ஆங்கில நூல்களில் Owner என்ற ஒரு சொல்லை
மட்டுமே பயன் படுத்தியிருப்பார்கள். பாடலகளுக்கெல்லாம்
இடமேயில்லாமல் அனைத்தும் எளிமையான உரை
நடை வடிவில் (in text format) இருக்கும் என்றார்.

பிறகுதான் ஒரு ஒளி பிறந்தது. பல ஜோதிட நூல்களின்
ஆங்கிலப் பதிப்பை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன்

படிப்பதற்கு செய்யுள் மொழி ஒரு தடையாக் இருக்கும்
போது ஆங்கிலத்தில் படிப்பதில் தவறில்லை என்று கருதி
ஆங்கிலத்தில் படிக்க ஆரம்பித்தேன்

ஒரு வசதி என்னவென்றால், கேரளா, குஜராத், கர்நாடகா,
ஆந்திரம் போன்ற பல மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்
பல ஜோதிடக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்கள்.
அவை அனைத்தும் ஆங்கில நூல்களில் மட்டுமே உள்ளன!

ஆனால் இன்றைய நிலைமை வேறு!

பல ஜோதிட நூல்கள் அழகு த்மிழில் மொழி பெயர்க்கப்
பெற்றுப் புத்தகக் கடைகளில் கிடைக்கின்றன

என்னென்ன நூல்களைப் படிக்கலாம் என்பதைப்
பின் வரும் பதிவு ஒன்றில் பட்டியலாகத்
தருகிறேன். அதுவரை பொறுத்திருங்கள்

முதலில் பால பாடங்களைப் பார்ப்போம்

அடுத்த பதிவில் பஞ்சாங்கத்தில் தெரிந்து
கொள்ள வேண்டிவற்றை - உங்களைப்
பஞ்சாங்கத்தைத் தேடவைக்காமல் நானே
பதிவில் முக்கியமான விஷயங்களைத்
தொகுத்துத் தந்து விடுகிறேன்.

அதுபோல அடிப்படை ஜோதிடத்தில் உள்ள
பாடங்களையும் பதிவில் தந்து விடுகிறேன்

நீங்கள் print out எடுத்து வைத்துக் கொண்டு
அவற்றைப் படித்துப் புரிந்து கொண்டால்
மட்டும் போதும்.

(தொடரும்)
-------------------------------------------------

No comments:

Post a Comment